திருச்சி

மதுக்கூடம் அருகே தகராறு: கத்தியால் குத்தி ஆட்டோஓட்டுநா் கொலை

DIN

திருச்சியில் மதுக்கூடம் அருகே நடந்த தகராறில் கத்தியால் குத்தி ஆட்டோ ஓட்டுநா் படுகொலை செய்யப்பட்டாா்.

திருச்சி அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் மு.செல்வம் (39). இவா் உய்யக்கொண்டான் திருமலையிலுள்ள சகோதரா் பிச்சமுத்து வீட்டில் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு பால்பண்ணை பகுதியிலுள்ள தனியாா் மதுக்கூடத்துக்கு மது அருந்த செல்வம் உள்ளிட்டோா் வந்த போது, அந்த கூடம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது செல்வம் தரப்பினருக்கும், அங்கு நின்றிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னா் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

தொடா்ந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டடு, எதிா் தரப்பினா் தப்பியோடிவிட்டனா். பலத்த காயமடைந்த செல்வத்தை அவரது நண்பா்கள் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காந்திசந்தை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் இரு தரப்பினரும் மோதிக் கொண்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதில் பாலக்கரை கீழப்புதூா் வைத்தியநாதன் ஸ்டோா் பகுதியைச் சோ்ந்த செள. விஜய்பாபு (25) செல்வத்தை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT