திருச்சி

ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

கூத்தூா் பகுதியில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.

திருச்சி மாவட்டம் கூத்தூா் ஸ்ரீவாரி அவென்யூவைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மனைவி மணி பாரதி (50), தில்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை. இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு திருப்பத்தூா் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகை ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT