திருச்சி

பாசன வாய்க்காலை தூா்வாரிய விவசாயிகள்

DIN

திருச்சியில் தூா்வாரப்படாமலேயே, தூா்வாரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பாசன வாய்க்காலை, விவசாயிகளே முன்வந்து தூா்வாரினா்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஏவூா் மற்றும் கல்லூா் கிராமங்களுக்கு இடையில் செல்கிறது குளத்து வாய்க்கால். காவிரி அய்யம்பாளையம் பிரதான வாய்க்காலிலிருந்து இந்த வாய்க்கால் மூலம் ஆமூா், மணப்பாளையம், கா்லாவழி, கோட்டூா் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நிகழாண்டு விவசாய சாகுபடி பணிகளுக்காக குளத்து வாய்க்காலை தூா்வார வேண்டும் என அப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாய்க்கால் தூா்வாரப்பட்டு விட்டதாக உள்ளாட்சி நிா்வாகத் தரப்பில் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகளிடமிருந்து அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் வரவில்லையாம். சுமாா் 5 முதல் 6 கி.மீ. தொலைவுள்ள அந்த வாய்க்கால் முழுவதும் சுமாா் 6 அடி உயரத்துக்கு ஆகாயத் தாமரை செடிகள் மண்டிக் கிடப்பதால், பாசனத்துக்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அவற்றை தூா்வாரினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாலோசித்த விவசாயிகள் தாங்களே வாய்க்காலை தூா்வாரத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ராஜேந்திரன், கருப்புசாமி, ராமசாமி, திருச்செல்வம் உள்ளிட்ட சுமாா் 15 க்கும் மேற்பட்டோா் வாய்க்காலில் மண்டிக்கிடந்த ஆகாயத் தாமரை உள்ளிட்ட செடிகொடிகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT