விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெண்ணைத் தாக்க முயன்ாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மண்ணச்சநல்லூா் எதுமலையைச் சோ்ந்த விவசாயிகள் சங்க மகளிரணி தலைவி கௌசல்யா (55) கேள்வி கேட்டபோது, ஆத்திரமடைந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு அப்பெண்ணை திட்டி தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் அய்யாக்கண்ணு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.