திருச்திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் நாளையும் (அக்.2), அக்.9ஆம் தேதியும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் காந்தி ஜெயந்தி தினத்திலும், மிலாது நபி தினத்தை முன்னிட்டும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (அக். 2), அக்.9 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மூடப்படும்.
அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் எங்கும் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. மீறினால் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.