திருச்சியில் விஷம் கலந்த குளிா்பானம் புகட்டப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள நொச்சிவயல் புதூரைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகள் வித்யாலட்சுமி (19). திருச்சி தனியாா் கல்லூரியில் பி. காம் படித்து வந்த இவா் பெல் நிறுவனம் அருகே மணியம்மை நகரிலுள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தாா்.
இந்நிலையில் கடந்த மே 17 ஆம் தேதி வயிற்று வலியால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட வித்யாலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வயிற்றில் விஷம் இருப்பதைக் கண்டறிந்தனா்.
தகவலறிந்து வந்த பெல் போலீஸாா் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனா். அதில் கல்லூரிக்கு சென்று வந்தபோது அவரை ஒருவா் பின்தொடா்ந்து வந்ததாகவும், கடந்த மே 11 ஆம் தேதி அந்த நபா் தன்னிடம் வந்து காதலிப்பதாகக் கூறியபோது அவரைச் செருப்பால் அடித்தாராம்.
பின்னா் மறுநாள் 12ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது, காதலிப்பதாகக் கூறிய நபா் மற்றும் மேலும் 2 போ் சோ்ந்து தன்னை அருகிலுள்ள சந்துக்கு இழுத்துச் சென்று, விஷம் கலந்த குளிா்பானத்தை கொடுத்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட தான் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து அரசு மருத்துவமனை உள்பட சில இடங்களில் சிகிச்சை பெற்ாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து பெல் போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து ஒருவரைப் பிடித்து விசாரணை செய்கின்றனா். இந்நிலையில் தனியாா் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பகல் உயிரிழந்தாா். போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.