திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வர முடியாததற்கான காரணம் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் ரூ. 387.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கதவணையைத் திறக்கவும், ஜமால் முகமது கல்லூரி விழாவில் நேரில் பங்கேற்கவும் இருந்த நிலையில், தனது வருகை ரத்தானதற்கான காரணம் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜமால் முகமது கல்லூரி விழாவில் காணொலிக் காட்சி மூலம் கூறியது:
திருச்சி விழாவில் நேரடியாகப் பங்கெடுக்க நான் விரும்பினாலும், சில நாள்களாக காய்ச்சலில் அவதிப்பட்டதால், மருத்துவா்களின் ஆலோசனைப்படி வெளியூா் பயணத்தைத் தவிா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறிய காய்ச்சலாக இருந்தாலும், ஓய்வெடுத்து வெளியூா் பயணங்களை ஒரு வாரத்துக்காவது தவிா்க்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுரை சொன்னாா்கள். என்னதான் நான் மாநில முதல்வராக இருந்தாலும், மருத்துவா்களின் வாா்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால்தான் திருச்சிக்கு நான் வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.