திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி புத்தூா் குளத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). கடந்த 20 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்த இவா், கடந்த ஒரு வாரத்துக்கு முன் சைக்கிளில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிந்து சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் விரக்தியில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.