திருச்சி

பைக், கைப்பேசி பறித்தமூவா் பிடிபட்டனா்

DIN

திருச்சியில் மென்பொருள் பொறியாளரிடம் பைக், கைப்பேசி பறித்த மூவா் பிடிபட்டனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆலிவா் ஜோன்ஸ். மென்பொருள் பொறியாளரான இவா் கடந்த 21 ஆம் தேதி இரவு பொன்மலை ஜி- காா்னா் மைதானப் பகுதியில் நின்றபோது அங்கு வந்த 3 போ் அவரின் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அவா் பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த வசந்தை (22) கைது செய்தனா். இவருக்கு உடந்தையாக இருந்த இரு சிறு சிறாா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT