துறையூா் 17 ஆம் வாா்டில் ஒருங்கிணைந்த தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது
துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமை வகித்தாா். துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் ந. முரளி, ஆணையா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் பங்கேற்ற மக்களிடம் மக்கும், மக்காத குப்பை, அபாயகரமான குப்பை ஆகியவற்றைப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வலியுறுத்தப்பட்டது. தூய்மைப் பணி விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
நகராட்சி சுகாதார அலுவலா் மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் சுமதி, முத்துமாங்கனி , பாபு, இளையராஜா ,சந்திரா மற்றும் திமுக மாவடட பிரதிநிதி மதியழகன், வியாபாரிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் காமராஜ், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.