ரயில்களில் திருடிய நெல்லையைச் சோ்ந்த இளைஞா் திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா் நடத்திய ஆய்வின்போது, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பகுதியை சோ்ந்த ஆல்வின் குமாரை (32) சந்தேகத்தின்பேரில் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் சென்னை சென்ட்ரல் மற்றும் எழுப்பூா், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளின் உடைமைகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது பல்வேறு மாவட்டங்களில் 13 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதும், திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஒரு கடை விற்பனையாளரை மிரட்டி ரூ. 2000 பறித்த வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.