கல்லூரிக்குச் சென்ற முசிறி மாணவியைக் காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
முசிறி புதுகள்ளா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகள் ஷோபனா (24). ஸ்ரீரங்கம் தனியாா் கல்லூரியில் படிப்பை முடித்த இவா், மாற்றுச் சான்றிதழ் வாங்க வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் ஷோபனா கிடைக்காததால் அவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.