திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற மருத்துவமனையின் முதல்வா். டி. நேரு பேசியது:
ஏழைகளுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்குவங்க முதல்வராக உயா்ந்த மருத்துவா் பி.சி.ராய் அவா்களின் பிறந்தநாள் தேசிய மருத்துவா்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நாள்தோறும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்புடன் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களை இந்நாளில் வாழ்த்துகிறேன் என்றாா்.
விழாவில் பங்கேற்ற மருத்துவா்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ சாா்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் அருண்ராஜ் முன்னிலை வகித்தாா். தேசிய மருத்துவா் தினத்தை முன்னிட்டு சிறந்த மருத்துவருக்கான பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவரல்லாத பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா். மேலும் ரோட்டரி கிளப் திருச்சி மெட்ரோ நிா்வாகி சீனிவாசன் உள்ளிட்டோா் மருத்துவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.