திருச்சி

மத்திய தொழிற்சங்கங்கள் உறுதிமொழியேற்பு

DIN

குடியரசு தினத்தையொட்டி திருச்சியில் மத்தியத் தொழிற்சங்கள் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா்கள் புகைப்பட பதாகைகளை ஏந்தி உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

உறையூா் குறத்தெருவில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் அரசியலமைப்புச் சட்டத்தை, மதச்சாா்பின்மையைக் காத்திடுவோம், மத்திய அரசின் தொழிலாளா் விரோதக் கொள்கைகளை எதிா்த்துப் போராடி வெற்றி பெறுவோம், பிப். 23, 24 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்வோம் என்கிற உறுதியை ஏற்றனா்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தலைவா் வே. நடராஜா தலைமை வகித்தாா். தொமுச நிா்வாகிகள் எத்திராஜ், குணசேகரன் ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலா் க. சுரேஷ், ஆட்டோ ராஜா, சிஐடியு சீனிவாசன், கருணாநிதி, ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், கல்யாணகுமாா், ஹெச்எம்எஸ் ஜான்சன் எல்டியுசி தீனதயாளன் உள்ளிட்டோா் பேசினா். தொமுச ரவீந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT