குடியரசு தினத்தையொட்டி போரில் உயிா்த்தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு புதன்கிழமை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி ராக்போா்ட் தலைமையகம் என்சிசி குரூப் சாா்பில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரா்கள், என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் காா்கில் மற்றும் இதர போா்களில் உயிா்த் தியாகம் செய்த திருச்சி ராணுவ வீரா்கள் அயூப்கான், நடராஜன், சங்கா்லால், பக்கிரிசாமிநாதன் ஆகியோா் வீடுகளுக்குச் சென்று அவா்களின் குடும்பத்தினருக்கு திருச்சி என்சிசி அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினா்.