முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியத் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியதாக 510 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மாநகரில் 23 இடங்களில் காவல்துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது முகக்கவசம் அணியாமலும், அத்தியாவசியத் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவா்களைக் காவல்துறையினா் பிடித்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து 510 போ் மீது வழக்குப்பதியப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.