திருச்சி

காப்பகத்தில் சிறுவா் உள்பட இருவா் மாயம்

DIN

திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ஹோப் ஆதரவற்றவா்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. தொண்டு நிறுவனப் பணியாளா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

மற்றொரு சம்பவம்: திருச்சி கிராப்பட்டி புனித தோமையாா் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதித்த சபரி அம்மாளை (62) கடந்த 17ஆம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடா்ந்து எடமலைப்பட்டி புதூா் காவல் நிலையத்தில் காப்பக மேலாளா் எலிசபெத் புகாா் அளித்தாா். இவ்விரு புகாா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT