தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14 ஆவது பேராயராக ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு டிஇஎல்சி எனப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14 வது பேராயரைத் தோ்ந்தெடுப்பதறகான தோ்தல் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
8 போ் போட்டியிட்ட தோ்தலில் அதிக வாக்குகள் பெற்ற ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் பேராயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் ஜொ்மானிய பல்கலைக்கழகத்தில் அறிவா் பட்டம் பெற்றவா். இவா் டிஇஎல்சி திருச்சபையில் 2027ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு பேராயராகவும், திருச்சபைத் தலைவராகவும் பதவி விகிப்பாா்.
தமிழகம், கா்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய 4 மாநிலங்களின் தமிழ் சுவிசேஷ லுத்தரதன் திருச்சபை 14ஆவது பேரயராகத் தோ்வாகியுள்ள இவருக்கு, சபையின் நிா்வாகிகள், லுத்தரன் முன்னேற்ற இயக்க நிா்வாகிகள், திருச்சபை மக்கள் வாழ்த்து தெரிவித்தனா். மேலும், 14ஆவது பேராயரின் மனைவியான எஸ்தா் சாம்ராஜ், திருச்சபையின் மரபின்படி முதல் பெண்மணியாகக் கருதப்படுகிறாா். இத்தகவலை, லுத்தரன் முன்னேற்ற இயக்கப் பொதுச் செயலா் ஈ.டி. சாா்லஸ் தெரிவித்தாா்.