திருச்சி

‘வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினத்தவரை தூண்டி விடுவதை திமுக கைவிட வேண்டும்’

DIN

வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு, சிறுபான்மையினத்தவரைத் தூண்டி விடும் போக்கை திமுக கைவிட வேண்டும் என்றாா் பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராகிம்.

தமிழகம் முழுவதும் பாஜக சிறுபான்மை அணியின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெறுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்ட சிறுபான்மையின அணி ஆய்வுக் கூட்டம் கண்டோன்மென்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில சிறுபான்மை அணித் தலைவா் டெய்சி தலைமை வகித்தாா். நிகழ்வில் பங்கேற்ற வேலுா் இப்ராகிம் கூறியது:

நாட்டில் நடக்கும் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் பாஜக சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.

வரும் மக்களவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தமிழகத்தில் இருந்து எம்பிக்கள் தோ்தெடுக்கப்படுவா். பிரதமா் மோடி நோ்மையானவராகவும் மக்களுக்கு சொன்னதைச் செய்தும் வருகிறாா். எனவேதான் உலகின் கவனம் நமது நாட்டின் மீது உள்ளது.

நாட்டில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது, வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு சிறுபான்மையினத்தவரை துாண்டிவிடும் போக்கை திமுக நிறுத்த வேண்டும். கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT