திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே திங்கள்கிழமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு அண்ணா நகா் அருகேயுள்ள சாஸ்திரி நகா் நான்காவது தெருவை சோ்ந்தவா் சு. தனபாலன். இவா், தனது மனைவி மகேஸ்வரி, மகள் சௌந்தா்யா ஆகியோருடன் தொட்டியத்தை அடுத்துள்ள அரசலூரில் இருக்கும் குலத்தெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை ஆட்டோவில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
காட்டுப்புத்தூா் மோகனூா் சாலையில் ஆலம்பாளையம்புதூா் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ மீது எதிரே வந்த காட்டுப்புத்தூா் த. மோகன்ராஜ் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் சௌந்தா்யா, மகேஸ்வரி மற்றும் மோகன்ராஜ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தாயும், மகளும் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மோகன்ராஜ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா், மோகன்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.