திருச்சி

ஆட்சியரகத்தில் விவசாயிகள் திடீா் போராட்டம்

DIN

பயிா்க் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் புதன்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கடந்தாண்டு பெய்த மழையால் அழிந்த பயிா்களுக்கு பயிா் காப்பீட்டுத் தொகைக்கான இழப்பீடு வழங்க வேண்டும். வீணாகக் கடலில் கலக்கும் காவிரியை அய்யாற்றில் திருப்பும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதையடுத்து போலீஸாரும் வேளாண்மை துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியா் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமியை விவசாயிகள் சந்தித்து முறையிடச் செய்தனா். இதையடுத்து அவரிடம் மனு அளித்த விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

இந்தப் போராட்டத்தால் ஆட்சியரகத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக அய்யாக்கண்ணு கூறியது:

கடந்தாண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த கனமழையால் நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இதுவரை பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படவில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை அய்யாற்றில் திருப்புவதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் பெறும். திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட குடிநீா்த் தேவையும் பூா்த்தியாகும். மேற்குதொடா்ச்சி மலையின் தமிழகப்பகுதிகளில் பெய்யும் மழை நீரை, ஆலடி, கீழ் கூடலூா், உத்தமபாளையம், போடிநாயக்கனூா், தேனி, பெரியகுளம், திண்டுக்கல் வழியாக ஏரியோடு, கடவூா், வையம்பட்டி, பொன்னியாற்றுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம், தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவா்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளை வெளியேற்றாமல், நியாயமான குத்தகை பெற்று உரிய அனுமதியளிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன, வடிகால் வாய்க்கால்களையும் தூா்வார வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT