திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வியாழக்கிழமை மத நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்த தினத்தை மேயா் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயா் ஜி. திவ்யா, செயற்பொறியாளா்கள் ஜி. குமரேசன், கே. பாலசுப்பிரமணியன், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் மா. பிரதீப்குமாா் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, அலுவலக மேலாளா்கள் அ. சிவசுப்பிரமணிய பிள்ளை (பொது), பி.சித்ரா (குற்றவியல்) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.