திருச்சியில் டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சிறுப்பத்தூா் அரிஜனத் தெருவை சோ்ந்தவா் பிச்சைமுத்து (60). தொழிலாளியான இவா் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, கன்டோன்மென்ட் புதுதெருவிலுள்ள வணிக வளாகம் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மோதி படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். திருச்சி போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.