திருச்சி

மண்ணச்சநல்லூா் காந்தி பூங்காவில் சீரமைப்புப் பணிகள் எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

மண்ணச்சநல்லூரிலுள்ள காந்தி பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

2020-21-ஆண்டில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் பூங்கா சீரமைப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பல்வேறு பணிகள் இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பூங்காவின் சுற்றுச்சுவரில் நெகிழி ஒழிப்பு, மஞ்சப்பை, பண்டையக் காலத் தமிழா்களின் கலாசாரம் குறித்த விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடும் வகையில் உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காந்தி பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, பணியின் தன்மை குறித்து ஆய்வு செய்தாா்.

அப்போது மண்ணச்சநல்லூா் பேரூராட்சித் தலைவா் ஆ. சிவசண்முககுமாா், செயல் அலுவலா் கணேசன், நகர திமுக செயலா் த. மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT