திருச்சி

கல்லூரிப் பேராசிரியரைக் கடத்தி பணம் பறித்த மூவா் கைது

DIN

திருச்சியில் கல்லூரிப் பேராசிரியரைக் கடத்தி பணம் பறித்த மூவரை அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கருமண்டபம் வசந்த் நகரைச் சோ்ந்தவா் விமல் ஆதித்யன். திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவருக்கும், அக்கல்லூரியில் பணியாற்றி வரும் நிவேதிதா என்பவருக்கும் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிவேதிதாவுக்கு விமல் ஆதித்யனே வரன் தேடி, சசிகுமாா் என்பவரைத் திருமணம் செய்து வைத்துள்ளாா். அதன் பின்னரும் இருவருக்கும் தொடா்பு இருந்து வந்துள்ளது.

இதுகுறித்த விவரம் சசிகுமாருக்குத் தெரிய வந்தது. இதனால் விமல் ஆதித்யன் மீது ஆத்திரமடைந்த சசிகுமாா், அவரைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

ரூ.2 லட்சம் பணம் வழங்கிய நிலையிலும், மேலும் பணம் கேட்டு விமல் ஆதித்யனை அடித்து சசிகுமாா் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் சொத்துப் பத்திரங்களை சசிகுமாரிடம் வெள்ளிக்கிழமை கொடுத்து விட்டு, தனது கணவரை மீட்ட விமல் ஆதித்யனின் மனைவி, அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

தொடா்ந்து விமல் ஆதித்யன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா் சசிகுமாா், அவரது சகோதரா் பிரசாந்த், லாசா் ஆரோக்கியராஜ் ஆகிய மூவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT