திருச்சியில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு விற்க அனுமதியின்றி பட்டாசு வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி கோட்டை காவல் ஆய்வாளா் தயாளன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பன் தலைமையிலான போலீஸாா் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1இல் அனுமதி பெற்று அந்த வீட்டில் நடத்திய சோதனையில் 11 பெட்டிகளில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் அந்த வீட்டில் வசித்த ஷியாம் சுந்தா் (40) மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.