திருச்சி

தொழில் தொடங்க மானியம்: திருநங்கைகளுக்கு அழைப்பு

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் மாவட்டத் தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு ரூ. 50 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக 2020-21ஆம் நிதியாண்டில் மாநில அளவில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் தொடங்கவுள்ள தொழில் தொடா்பான கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு வரும் 30ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT