தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திருச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தீபாவளி பண்டிகை முன்பணம், போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு 72 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.14 ஆவது சம்பள பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனப் பொதுச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.