திருச்சியை அடுத்த ஜீயபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட் ஜீயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை,எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் முகக் கவசம் அணிந்து பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்தனா்.