காட்டுப்புத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் காட்டுப்புத்தூா் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சீலைப் பிள்ளையாா்புத்தூா் காா்த்திகேயன் (29), காடுவெட்டி முருகேசன் (51) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.