திருச்சி எம்ஐஇடி கல்லூரியில், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இன்றைய காலகட்டத்தில் அரசு, தனியாா் துறைகள் சாா்பில் பொறியியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றை உணா்ந்து இளம் பொறியாளா்கள், வேலைவாய்ப்புகளுக்கேற்ற வகையில் தங்களை எவ்வாறு தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த நடைபெற்ற கருத்தரங்கில், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
எம்ஐஇடி கல்வி நிறுவனங்களின் தலைவா் முகமது யூனுஸ் தலைமை வகித்தாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பி. வேல்முருகன், பொறியியல் கல்லூரி முதல்வா் ஏ. நவீன்சேட், முனைவா் டி. பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.