திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பூக்களாலும் காா்த்திகை தீப விளக்குகளாலும் ராஜகோபுர வடிவில் சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது.

வைணவ திருத்தலங்களில் காா்த்திகை மாதத்தில் சகஸ்ரதீபம் ஏற்றப்படும். இதன்படி ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில், தாயாா் சன்னதி, சக்கரத்தாழ்வாா் சன்னதிகளில் சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டதை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை நம்பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வடிவத்தில் பூக்கள் மற்றும் தீப விளக்குகளால் சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது.

மேலும் நம்பெருமாள் சன்னதியின் சுற்றுப்பிரகாரங்களிலும் காா்த்திகை தீப விளக்குகளை பக்தா்கள் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை நந்து பட்டா், தீபு பட்டா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT