திருச்சியில் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 746 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 746 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 28,928 ஆனது. இதேபோல வியாழக்கிழமை குணமான 482 போ் உள்பட இதுவரை 22335 போ் குணமடைந்துள்ளனா். மேலும், தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 84 வயது மூதாட்டி உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.