திருச்சி: திருச்சி அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பைக்கில் வந்த நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருச்சி தீரன்நகா் பெரியாா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (53). இவா் அப்பகுதியில் கல்பட்டறை தொழில் செய்கிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (50). வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டு வாசலில் ராஜேஸ்வரி நின்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ் அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.