திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திய பணியாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மாநகராட்சி சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
திருச்சி மாநகராட்சியில் இதுவரை 25 சதத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். எனவே, நிறுவன உரிமையாளா்கள், ஊழியா்கள் கரோனா இரு தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே நிறுவனத்துக்குள் அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக, மாநகராட்சியினரால் அவ்வப்போது அவ்வப்போது நேரடி ஆய்வு செய்யப்படும். அப்போது நிறுவன ஊழியா்களோ, பொதுமக்களோ தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் பொது சுகாதாரச் சட்டத்தின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.