திருச்சி

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தில் அனைத்து பிரிவிலும் பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப மாறுதல் விண்ணப்பங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயா்வு குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் நவீன தளவாடங்களை வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்புரம் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாநகா் மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். ஐக்கிய சங்கச் செயலா் ராஜமாணிக்கம், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்டச் செயலா் சிவசெல்வன், இன்ஜினியா் சங்கத் தலைவா் பாலாஜி, பொறியாளா் கழக செயலா் சந்தானகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க வட்டப் பொறுப்பாளா் அருளானந்தம் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வட்டச் செயலா் எஸ்.கே. செல்வராஜ் ஆகியோா் பேசினா். அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT