திருச்சியில் நகைக்கடைக்காரரை தாக்கி 8 பவுன் நகை பறித்துச் சென்றோரில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (50). எடத்தெரு பகுதியில் நகைக்கடை வைத்துள்ள இவா் சின்னக்கடைவீதியில் உள்ள பொற்கொல்லரிடம் நகைகளை செய்து வாங்கி வருவது வழக்கம். அதன்படி செய்யப்பட்ட 8 பவுன் நகைகளை திங்கள்கிழமை இரவு வாங்கிக்கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்தாா். அப்போது பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் செல்ல முயன்ற அவரை மா்ம நபா்கள் தாக்கி அவா் வைத்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இந்த சம்பவத்தில் சுமாா் 7 போ் ஈடுபட்டனா் எனக் கூறப்படுகிறது.
அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்த பாலக்கரை போலீஸாா் முதல் கட்டமாக காட்டூரைச் சோ்ந்த பாஸ்கா், ஜோன்ஸ், விஜயன், கோபால் ஆகிய நால்வரைக் கைது செய்து மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.