திருச்சி, செப். 25: திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 107 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,083 ஆக உயா்ந்தது.
இதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத் தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து வெள்ளிக்கிழமை குணமான 58 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,114 ஆக உயா்ந்தது. கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது. மாவட்டத்தில் 827 போ் சிகிச்சை பெறுகின்றனா்.