திருச்சி, செப். 25: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்த சிவகங்கை இளைஞரை விமானநிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை இரவு ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த பொ. பிரசாத் (35) என்பவரது கடவுச்சீட்டை சோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே இந்தியா வந்து சென்றது போல போலி முத்திரை இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து விமான நிலையக் காவல் நிலையத்தில் பிரசாத் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதியப்பட்டது. பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.