திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடந்தது.
இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன், வெக்காளியம்மன் கோயில் உதவி ஆணையா் சு. ஞானசேகா் சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் எண்ணினா்.
முடிவில் ரூ. 72 லட்சத்து 89 ஆயிரத்து 842 ரொக்கம், 2 கிலோ 945 கிராம் தங்கம், 3 கிலோ 186 கிராம் வெள்ளி, 54 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது.
இந்த காணிக்கை கடந்த 14 நாள்களில் வந்தது ஆகும். இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.