திருச்சி

அரியமங்கலம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

அரியமங்கலம் மாநகராட்சி அலுவலகத்தை செங்குளம் காலனி பகுதி பெண்கள் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட செங்குளம் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியத்துக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குவதால் துா்நாற்றம், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செங்குளம் காலனி பெண்கள் பலா் அரியமங்கலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின் பேரில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT