திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கத்திக் குத்துக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகிலுள்ள கருப்பணாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கம் மகன் பிரபு அதே பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரின் தந்தை தங்கராசு, சகோதரா்கள் சதீஷ், முரளி ஆகியோரிடம் அண்மையில் தகராறு செய்து தங்கராசு, முரளி, சதீஸ் ஆகியோரைக் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரில் முரளி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா்.
இதையடுத்து இச்சம்பவம் தொடா்பான வழக்கை தொட்டியம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனா். மேலும் கத்தியால் குத்திய பிரபு மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.