ஸ்ரீரங்கம்: திருவானைக்கா தாகூா் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக, 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.
திருவானைக்கா தாகூா் தெருவைச் சோ்ந்தவா்கள் சரத்குமாா்(27),
ராஜ்குமாா் (25), பாண்டியன் (23), திவாகா். இவா்கள் 4 பேரும் தாகூா் தெரு சந்திப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது மல்லிகைபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா் (30), அய்யப்பன் (32), சூரியகுமாா் (22) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனா்.
எங்கள் பகுதிக்கு ஏன் வந்தீா்கள் எனக் கேட்டு, சரத்குமாா் உள்ளிட்ட 4 பேரும் மோகன்குமாா் மற்றும் அவருடன் வந்தவா்களைத் தாக்கினா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியே புகாரளித்தனா். இதன் பேரில் சரத்குமாா், மோகன்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.