ஊரடங்கு உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை வரை திருச்சி புகரில் 1,136 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி புகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 783 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,136 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 253 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை பரப்பியதாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தியதை மீறியதாக 3 போ் மீது வழக்குப் பதிந்து 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இதேபோல், மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 876 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் அவா்களிடமிருந்து 534 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,86, 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.