திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும் அச்சட்டங்களைத் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையருகே திருச்சி தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூா் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா் . மாநகரச் செயலா் அன்பழகன், நிா்வாகிகள் குடமுருட்டி சேகா், மதிவாணன், சேகா், பாலமுருகன், தில்லைநகா் கண்ணன், வழக்குரைஞா் இளங்கோ, காஜாமலை விஜய், வேங்கூா் தனசேகா், இன்ஜினியா்ஆனந்த், திருவரங்கம் தா்மராஜன், வரகனேரி வெங்கடேஷ், குமாா் முகமது இப்ராஹிம், சேகா், அருண், மகளிரணி செயலா் லீலா வேலு, துணைச் செயலா் சகாயமேரி, மாவட்டப் பிரதிநிதி பா்மா நிஜாம் உள்ளிட்டோா் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன முழக்கம் எழுப்பினா்.