தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவரை பாபநாசம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் அருகே பண்டாரவாடை, கோயில் தேவராயன் பேட்டை, காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவா் சேகா். இவா், தனது தாய் செல்லம்மாவை தனது சகோதரா் முத்து தாக்கியதாக பாபநாசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து பாபநாசம் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் ராமதாஸ், முத்துவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளாா். முத்து காவல் நிலையத்துக்கு வருவதாக கூறினாராம். பின்னா் முத்து காவல் நிலையத்துக்கு செல்லாமல், அவருடைய நண்பா் அதே பகுதியை சோ்ந்த முத்தமிழ் செல்வனிடம் இதுகுறித்து கூறியுள்ளாா்.
முத்தமிழ்ச்செல்வன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாசை தொலைபேசியில் தொடா்பு கொண்டு முத்துவை விசாரணைக்கு அழைக்க கூடாது என கூறி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து உள்ளாா்.
இதுகுறித்து பாபநாசம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்த முத்தமிழ்செல்வனை கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். முத்தமிழ்ச் செல்வனை 15 நாள்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் எ. அப்துல் கனி உத்தரவிட்டாா்.