தஞ்சாவூர்

மீனவா் தற்கொலை

DIN

அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மீனவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி கரையூா் தெரு கிராமத்தைச் சோ்ந்த மீனவா் சங்கா் (40). இவரது மகன் மணிகண்டன் (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

கரையூா் மாரியம்மன் கோயில் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு விழாவில் பங்கேற்ற ஒருவரிடம் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராமத்தினா் மணிகண்டனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த சங்கா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸாா், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனை செய்யக் கூடாது எனக் கூறி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வுக்கு சடலத்தை உட்படுத்தினா்.

மகனைக் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT