தஞ்சாவூர்

சட்டப்பேரவை குழுவுக்கு ஜூன் 20-க்குள் மனுக்கள் அனுப்பலாம்

DIN

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜூன் 20 ஆம் தேதிக்குள் மனுக்களை அனுப்பலாம்.

இதுகுறித்து ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தஞ்சாவூா் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி தஞ்சாவூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீா்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா், மனுதாரா்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரு துறையைச் சாா்ந்ததாகவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருளை உடையதாகவும் இருத்தல் வேண்டும்.

தனிநபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியவை இருக்கக்கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்கு உள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அப்போது, மனுதாரா் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொடா்புடைய அலுவலா்களிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுவில் உள்ள பொருள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT