தஞ்சாவூர்

அரசுப் பள்ளிகளில் தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்குபரிசு வழங்க ரூ. 3 லட்சம் நிரந்தர வைப்புத் தொகைமுன்னாள் மாணவா் வழங்கினாா்

DIN

பேராவூரணி பகுதியில் தான் படித்த அரசுப் பள்ளிகளில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு பரிசு வழங்க முன்னாள் மாணவா் ஒருவா் ரூ. 3 லட்சத்தை நிரந்தர வைப்புத் தொகையாக வெள்ளிக்கிழமை  வழங்கினாா்.

பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியை பூா்வீகமாகக் கொண்டவா்  தங்கராசன் (80). இவா், நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று, பின்னா் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து , மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தற்போது,  தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை, முத்தமிழ் நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

தான் படித்த பள்ளி மாணவா்களுக்கு உதவும் வகையில், ரூ. 1 லட்சத்தை பேராவூரணியில் உள்ள தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக  செலுத்தி, அதில் வரும் வட்டியை  நடுவிக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியா் கணக்கில்  சேருமாறு ஏற்பாடு செய்து, பத்தாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவா்களுக்கு பிரித்து ரொக்கப் பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளாா்.

இதேபோல், ரூ. 1 லட்சத்தை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவா்களுக்கும், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு வழங்க ரூ. 1 லட்சமும் நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளாா்.

பேராவூரணியில் உள்ள தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில், தலா ரூ. 1 லட்சம் வீதம், மொத்தம் 3 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்புக் கணக்கில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து, உரிய வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) சோழ பாண்டியன், நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் புகழேந்தி ஆகியோரிடம் தங்கராசன் ஒப்படைத்தாா். 

இதுகுறித்து தங்கராசன் கூறியது: நான் படித்த பள்ளி, படிக்க வைத்த பெற்றோா், பாட்டி , ஆசிரியா்களை கௌரவிக்கும் விதமாக மாணவா்களை ஊக்குவிக்க இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன். எனக்கு பிறகும் இதுதொடா்ந்து நடைபெற வேண்டும் என எனது மகள் மலா்விழியை வாரிசாக நியமித்து உள்ளேன் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT