கும்பகோணம் அருகேயுள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டம், உமா மகேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட சாரங்கபாணி பேட்டையில் உமாதேவி உடனாய உமாமகேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலை கோயில் குருக்கள் வியாழக்கிழமை மாலை ஒரு கால பூஜையை முடித்துவிட்டு பூட்டிச் சென்றாா். மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை இவா் கோயிலை திறந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.